படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

அஜித் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இதனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் தொடர்ந்து கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சர்வதேச போட்டியில் முக்கிய கவனம் பெற்று வரும் அஜித்தின் அணி, அதில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அஜித் மீண்டும் தமிழ்நாட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டு இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தினாலும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது கார் பந்தயங்களுக்கு இடைவெளி விட்டு இருப்பதால் இந்த நேரத்தில் துப்பாக்கி பயிற்சி அவர் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது கொங்கு நாடு ரைபிள் கிளப் நிறுவனர் கே.எஸ்.செந்தில் குமாருடன் இணைந்து, திருப்பூர் வெள்ளக்கோவில் பகுதியிலுள்ள கேஆர்சி பயரிங் ரேஞ்சில் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.