படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

கொச்சி : முறைகேடாக சொகுசு வாகனங்களை பூடான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த புகாரில் மலையாள நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். ‛ஆபரேஷன் நும்கூர்' என்ற பெயரில் நடக்கும் இந்த ரெய்டு கேரளாவில் சுமார் 30 இடங்களில் நடந்தது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் பிருத்விராஜ் மற்றும் துல்கர் சல்மான். பிருத்விராஜ் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களை தயாரித்தும், இயக்கியும் வருகிறார். அதே போல் நடிகர் மம்முட்டியின் மகனான நடிகர் துல்கரும் நடிப்பு தாண்டி படங்களும் தயாரிக்கிறார். பொதுவாகவே மலையாள நடிகர்கள் சொகுசு கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்கள், விதவிதமான வெளிநாட்டு உயர் ரக கார்களை பல நடிகர்கள் வைத்துள்ளனர்.
இந்நிலையில் சிலர் பூட்டான் வழியாக ஆடம்பர வாகனங்களை முறைகேடாக இறக்குமதி செய்து வருவதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது. இதை தடுக்கும் விதமாக நாடு தழுவிய அளவில் ‛ஆபரேஷன் நும்கூர்' என்ற பெயரில் சுங்க அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
குறிப்பாக கேரளாவில் மட்டும் 30 இடங்களில் இந்த ரெய்டு நடந்தது. இதில் மலையாள நடிகர்கள் பிருத்விராஜ் மற்றும் துல்கர் சல்மான் வீடுகளிலும், அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் ரெய்டு நடந்தது. வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத வாகன இறக்குமதியில் இவர்கள் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்படி இந்த ரெய்டை அதிகாரிகள் மேற்கொண்டனர். அவர்கள் வாங்கிய உயர் ரக வாகனங்கள் குறித்து சரிபார்ப்பு பணியை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதே போல் தொழிலதிபர்கள் மற்றும் சில கார் ஷோரூம்களிலும் இந்த சோதனை நடக்கிறது.
குறைந்த விலையில் பூடானில் ஏலம் விடப்பட்ட சொகுசு ரக வாகனங்களை முறையான வரி செலுத்தாமல் இந்தியாவிற்கு கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்தர வாகனங்கள் இமாச்சலப் பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தற்காலிக முகவரிகளைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டு, பின்னர் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் நிறைய வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.