சக்தித் திருமகன், கிஸ் படங்களின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | அமெரிக்க பிரீமியரில் பவன் கல்யாணின் ஓஜி படம் செய்த சாதனை! | எண்ணம் போல் வாழ்க்கை என்பது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது! -இட்லி கடை டிரைலர் விழாவில் தனுஷ் பேச்சு | ஷேன் நிகாமிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்: சாந்தனு | பவன் கல்யாண் படத்திற்கு சலுகைகளை அள்ளி வழங்கிய ஆந்திர அரசு | பிளாஷ்பேக்: 40 வருடங்களுக்கு முன்பே பிகினியில் கலக்கிய ஜெயஸ்ரீ | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய சி.ஆர்.ராஜகுமாரி | அவர்களை பிதுக்கணும். மசாலா தடவணும்... சமூகவலைதள பார்ட்டிகள் மீது கோபமான வடிவேலு | கவர்ச்சி உடைகளுக்கு வரும் விமர்சனம் குறித்து கவலை இல்லை! - நடிகை வேதிகா | மலையாளத்தில் அறிமுகமாவதை உறுதிபடுத்திய டிஎஸ்கே! |
தமிழ் சினிமாவிற்கும் 3டி தொழில்நுட்பத்திற்கும் ராசியே இல்லை. தமிழில் ஒரு சில படங்கள்தான் 3டி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. ஆனால் அனைத்து படங்களும் தோல்வி அடைந்தது. 'மைடியர் குட்டிச்சாத்தான்' பெரும் வெற்றி பெற்றபோது ஏவிஎம் நிறுவனம் ரஜினி நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் 3டி படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்தது. ஆனால் ரஜினி மறுத்து விட்டார். '3டி தொழில் நுட்பத்தில் படம் எடுத்தால் மக்கள் அந்த தொழில்நுட்பத்தைத்தான் ரசிப்பார்கள் படத்தின் கதையை விட்டுவிடுவார்கள்' என்று கூறிவிட்டார்.
தமிழில் தோல்வியை சந்தித்த மற்றுமொரு 3டி படம் 'தங்கமாமா'. சைமன் வி.குரியன் என்ற மலையாள இயக்குனர் இயக்கினார். அருண் என்ற புதுமுகத்துடன் சசிகலா நடித்தார். நம்பியார் உள்ளிட்ட மேலும் சிலர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார். 1985ல் வெளியான இந்த படமும் 'அன்னை பூமி' படம் போன்றே தோல்வி அடைந்தது.
பிற்காலத்தில் வெளிவந்த 'அம்புலி' என்ற 3டி படம்தான் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.