இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ | 125 கோடியில் உருவாகும் சம்பரலா ஏடிக்கட்டு | கல்கி 2ம் பாகத்தில் தீபிகா இல்லை: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு | தங்கை என அழைத்து என் இதயத்தை நொறுக்கினார் : அஜித் மீதான கிரஷ் குறித்து நடிகை மகேஸ்வரி | பிளாஷ்பேக்: ரஜினி பட கிளைமாக்சை மாற்றிய ஏவிஎம் சரவணன் | பிளாஷ்பேக்: பண்டரிபாயை தெரியும், மைனாவதியை தெரியுமா? | சவுந்தர்யாவுடன் சேர்ந்து நானும் போயிருக்க வேண்டியது : மீனா பகிர்ந்த புதிய தகவல் |
பாடகர் மனோவின் மகன் துருவ் 'வட்டக்கானல்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பிதாக்புகழேந்தி இயக்குகிறார். சென்னையில் நடந்த இந்த பட விழாவில் பேசிய பாடகர் மனோ, ''நான் கஷ்டப்பட்டு பாடி சம்பாதிக்கிறேன். ஒரு பாடலுக்கு சில ஆயிரங்கள் கிடைக்கிறது. ஆகவே, என்னால் படம் தயாரிக்க முடியாது அதற்கு மனசும் வரவில்லை. என் வெளிநாட்டு நண்பர்கள் சிலர் நீங்க படம் தயாரியுங்க. நாங்க சப்போர்ட் செய்கிறோம் என்கிறார்கள். அப்படி செய்தால் அந்த நட்பு முறிந்துவிடும். பல கோடி ஒரே நேரத்தில் காணாமல் போய்விடும்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.வி, பாடகர் எஸ்பிபி தொடங்கி பலர் படம் தயாரித்து கஷ்டப்பட்டத்தை பார்த்து இருக்கிறேன். குறிப்பாக, அண்ணன் எஸ்.பி.பி படம் தயாரித்தார்; அதனால் ஏற்பட்ட கடனுக்கு பாட்டு பாடி வட்டி கட்டினார். ஆகவே, பாடுவதை மட்டுமே நான் தொழிலாக வைத்து இருக்கிறேன். என் மகனுக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட, இந்த படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். என் அன்பு வேண்டுகோளை ஏற்று சங்கர் மகாதேவன், கார்த்திக் போன்ற பாடகர்கள் இந்த படத்தில் பாடிக்கொடுத்தனர். அவர்களுக்கு நன்றி'' என்றார்.
வட்டக்கானல் என்பது கொடைக்கானலில் உள்ள ஒரு ஏரியா. போதை காளான் விற்பனைக்கு புகழ்பெற்றது. இந்த படமும் அந்த போதைக்காளன் பின்னணியில் உருவாகி இருக்கிறது. ஆர்.கே.சுரேஷ் முக்கியமான வேடத்தில் நடித்து இருக்கிறார். மீனாட்சி கோவிந்தராஜன் ஹீரோயினாக நடித்துள்ளார். தனது மகன் எஸ்.பி.பி சரண் தயாரித்த மழை உள்ளிட்ட சில படங்கள் தோல்வி அடைந்ததால் அதை அடைக்க பல்வேறு இசைக் கச்சேரிக்களை நடத்தி, பல்வேறு நாடுகளுக்கு சென்று அதன் மூலம் கிடைத்த வருவாயை வைத்து வட்டி கட்டியிருக்கிறார் எஸ்பிபி. அதைதான் மனோ பேசியிருக்கிறார்.