Advertisement

சிறப்புச்செய்திகள்

இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ | 125 கோடியில் உருவாகும் சம்பரலா ஏடிக்கட்டு | கல்கி 2ம் பாகத்தில் தீபிகா இல்லை: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு | தங்கை என அழைத்து என் இதயத்தை நொறுக்கினார் : அஜித் மீதான கிரஷ் குறித்து நடிகை மகேஸ்வரி | பிளாஷ்பேக்: ரஜினி பட கிளைமாக்சை மாற்றிய ஏவிஎம் சரவணன் | பிளாஷ்பேக்: பண்டரிபாயை தெரியும், மைனாவதியை தெரியுமா? | சவுந்தர்யாவுடன் சேர்ந்து நானும் போயிருக்க வேண்டியது : மீனா பகிர்ந்த புதிய தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாட்டு பாடி வட்டி கட்டினார் எஸ்.பி.பி: பாடகர் மனோ சொன்ன ஷாக்கிங் நியூஸ்

18 செப், 2025 - 11:38 IST
எழுத்தின் அளவு:
S.P.B.-paid-interest-by-singing-songs-Shocking-news-told-by-singer-Mano


பாடகர் மனோவின் மகன் துருவ் 'வட்டக்கானல்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பிதாக்புகழேந்தி இயக்குகிறார். சென்னையில் நடந்த இந்த பட விழாவில் பேசிய பாடகர் மனோ, ''நான் கஷ்டப்பட்டு பாடி சம்பாதிக்கிறேன். ஒரு பாடலுக்கு சில ஆயிரங்கள் கிடைக்கிறது. ஆகவே, என்னால் படம் தயாரிக்க முடியாது அதற்கு மனசும் வரவில்லை. என் வெளிநாட்டு நண்பர்கள் சிலர் நீங்க படம் தயாரியுங்க. நாங்க சப்போர்ட் செய்கிறோம் என்கிறார்கள். அப்படி செய்தால் அந்த நட்பு முறிந்துவிடும். பல கோடி ஒரே நேரத்தில் காணாமல் போய்விடும்.

இசையமைப்பாளர் எம்.எஸ்.வி, பாடகர் எஸ்பிபி தொடங்கி பலர் படம் தயாரித்து கஷ்டப்பட்டத்தை பார்த்து இருக்கிறேன். குறிப்பாக, அண்ணன் எஸ்.பி.பி படம் தயாரித்தார்; அதனால் ஏற்பட்ட கடனுக்கு பாட்டு பாடி வட்டி கட்டினார். ஆகவே, பாடுவதை மட்டுமே நான் தொழிலாக வைத்து இருக்கிறேன். என் மகனுக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட, இந்த படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். என் அன்பு வேண்டுகோளை ஏற்று சங்கர் மகாதேவன், கார்த்திக் போன்ற பாடகர்கள் இந்த படத்தில் பாடிக்கொடுத்தனர். அவர்களுக்கு நன்றி'' என்றார்.

வட்டக்கானல் என்பது கொடைக்கானலில் உள்ள ஒரு ஏரியா. போதை காளான் விற்பனைக்கு புகழ்பெற்றது. இந்த படமும் அந்த போதைக்காளன் பின்னணியில் உருவாகி இருக்கிறது. ஆர்.கே.சுரேஷ் முக்கியமான வேடத்தில் நடித்து இருக்கிறார். மீனாட்சி கோவிந்தராஜன் ஹீரோயினாக நடித்துள்ளார். தனது மகன் எஸ்.பி.பி சரண் தயாரித்த மழை உள்ளிட்ட சில படங்கள் தோல்வி அடைந்ததால் அதை அடைக்க பல்வேறு இசைக் கச்சேரிக்களை நடத்தி, பல்வேறு நாடுகளுக்கு சென்று அதன் மூலம் கிடைத்த வருவாயை வைத்து வட்டி கட்டியிருக்கிறார் எஸ்பிபி. அதைதான் மனோ பேசியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ்மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை ... ரஜினி, கமல் இணையும் படம்: லோகேஷ் கனகராஜ்க்கு எதிர்ப்பு ரஜினி, கமல் இணையும் படம்: லோகேஷ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in