வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? | பிளாஷ்பேக்: விஜயகாந்தின் இரட்டை வேட கணக்கை துவக்கிய ராமன் ஸ்ரீ ராமன் | பிளாஷ்பேக் : தேவதாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்ட சவுகார் ஜானகி |
கடந்த 2011ல் மலையாளத்தில் வரலாற்று பின்னணியில் வெளியான படம் உருமி. பிரித்விராஜ், பிரபுதேவா, ஆர்யா, ஜெனிலியா, வித்யாபாலன், நித்யா மேனன் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியுடன் வெளியான இந்த படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியிருந்தார். பிரபல கதாசிரியர் சங்கர் ராமகிருஷ்ணன் கதை எழுதி இருந்தார். இந்த நிலையில் ஏற்கனவே ஹிட்டான படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்கும் டிரெண்ட்டில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பது போல உருமி படத்திற்கும் இரண்டாம் உருவாக இருக்கிறது.
படம் வெளியாகி கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இந்த தகவலை படத்தின் கதாசிரியரான சங்கர் ராமகிருஷ்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இவ்வளவு காலதாமதம் ஏன் என்றால் முதல் பாகத்திற்கு பிறகான கதையை எழுதுவதற்கு 12 வருடங்கள் நேரம் பிடித்தது என்று அவர் கூறியுள்ளார்
மேலும் இதன் கதை மொத்தம் மூன்று பாகங்களாக இருக்கும்.. தற்போது இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்து விட்டன” என்று கூறியுள்ளார். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தை இயக்கப் போவது யார்? முதல் பாகத்தில் நடித்த பிரித்விராஜ், பிரபுதேவா மற்றும் முதல் பட கதாநாயகிகள் யார் யார் இந்த படத்தில் இடம் பெறப் போகிறார்கள் என்பதெல்லாம் இன்னும் முடிவாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.