படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தெலுங்கு முன்னணி நடிகரான மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா ஷிரோத்கர். இவரது தங்கை ஷில்பா ஷிரோத்கர். பாலிவுட் நடிகையான இவர் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ஜடாதரா என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் மும்பையில் இவர் பயணித்த கார் மீது அங்குள்ள மிகப் பெரிய நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதியதில் கார் விபத்துக்குள்ளானது. காரின் பின்புறம் மிகவும் மோசமான நிலையில் சேதம் அடைந்தது. இது குறித்து மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார் ஷில்பா ஷிரோத்கர்.
அதேசமயம் சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவன அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு இந்த விபத்து குறித்து அவர் நியாயம் கேட்டபோது, இந்த விபத்துக்கு அவர்களது நிறுவனம் பொறுப்பேற்காது என்றும், அந்த பேருந்து ஓட்டிய ஓட்டுனர் தான் பொறுப்பு என்றும் அலட்சியமாக பதில் கூறினார்களாம்.
இது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள ஷில்பா ஷிரோத்கர், “இந்த விஷயத்தில் மும்பை போலீசார் மிகவும் கனிவுடன் அதே சமயம் நியாயமாகவும் நடந்து கொண்டு சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்றும் கூறியுள்ளார்.