2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் |
1930களில் பெரிய தயாரிப்பாளராக இருந்தவர் லேனா செட்டியார் என்று அழைக்கப்படும் எஸ்.எம்.லட்சுமணன் செட்டியார். உயர் ரக கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். சொந்தமாக பிரிண்டிங் பிரஸ் வைத்திருந்தார். அன்றைக்கு கோடீஸ்வரர்கள் மட்டுமே இருக்கும் கிளப்புகளில் மெம்பராக இருந்தார்.
தியாகராஜ பாகவதர் நடித்த 'பவளக்கொடி' படத்தின் மூலம் தயாரிப்பாளரான இவர் , அதன் பிறகு எம்.ஜி.ஆர் நடித்த 'மதுரை வீரன்', 'ராஜா தேசிங்கு', சிவாஜி நடித்த 'காவேரி', பி.யு.சின்னப்பா நடித்த 'கிருஷ்ண பக்தை' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார். பெரும்பாலானவை வெற்றிப் படங்கள்.
ஆனால் எந்த படத்திலும் அவர் தயாரிப்பாளர் என்று தனது பெயரை போட்டுக் கொள்ளவில்லை. 'கிருஷ்ணா பிக்சர்ஸ் வழங்கும்' என்று அவரது கம்பெனி பெயர் மட்டுமே டைட்டில் கார்ட், விளம்பரம், பாட்டு புத்தகம் அனைத்த்திலும் போடப்பட்டிருக்கும்.