சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
1930களில் பெரிய தயாரிப்பாளராக இருந்தவர் லேனா செட்டியார் என்று அழைக்கப்படும் எஸ்.எம்.லட்சுமணன் செட்டியார். உயர் ரக கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். சொந்தமாக பிரிண்டிங் பிரஸ் வைத்திருந்தார். அன்றைக்கு கோடீஸ்வரர்கள் மட்டுமே இருக்கும் கிளப்புகளில் மெம்பராக இருந்தார்.
தியாகராஜ பாகவதர் நடித்த 'பவளக்கொடி' படத்தின் மூலம் தயாரிப்பாளரான இவர் , அதன் பிறகு எம்.ஜி.ஆர் நடித்த 'மதுரை வீரன்', 'ராஜா தேசிங்கு', சிவாஜி நடித்த 'காவேரி', பி.யு.சின்னப்பா நடித்த 'கிருஷ்ண பக்தை' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார். பெரும்பாலானவை வெற்றிப் படங்கள்.
ஆனால் எந்த படத்திலும் அவர் தயாரிப்பாளர் என்று தனது பெயரை போட்டுக் கொள்ளவில்லை. 'கிருஷ்ணா பிக்சர்ஸ் வழங்கும்' என்று அவரது கம்பெனி பெயர் மட்டுமே டைட்டில் கார்ட், விளம்பரம், பாட்டு புத்தகம் அனைத்த்திலும் போடப்பட்டிருக்கும்.