‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார். அந்தப்படம் ஓரளவுக்கு பேசப்பட அதன் பின்னர் அவரது இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் ஆடை, சந்தானம் நடிப்பில் குலு குலு ஆகிய படங்கள் வெளிவந்தன. ஆனால் இந்த இரு படங்களும் வெற்றியை பெறவில்லை.
இதற்கிடையே லோகேஷ் கனகராஜின் ‛மாஸ்டர், விக்ரம், லியோ' உள்ளிட்ட படங்களுக்கு கூடுதலாக திரைக்கதை, வசனமும் எழுதினார். தற்போது சர்தார் 2, கராத்தே பாபு ஆகிய படங்களுக்கு கூடுதல் திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.
இதைத்தொடர்ந்து ரத்னகுமார் அடுத்து ஒரு படத்தை இயக்க போகிறார். இதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்க போகிறது. இதில் நாயகனாக ‛ரெட்ரோ' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விது நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.