தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் |
அஜித் நடிப்பில் இந்தாண்டு பிப்ரவரி மாதம் விடாமுயற்சி, இந்த மாதம் குட் பேட் அக்லி என இதுவரை இல்லாத அதிசயமாக ஒரே வருடத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகின. இதில் குட் பேட் அக்லி திரைப்படம் ஓரளவு வசூல் ரீதியாக வெற்றி பெற்று இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதே சமயம் அஜித் வழக்கம் போல தனது கார் ரேஸ் பயணங்களில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். இவற்றை தவிர பெரிதாக பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத அஜித் நேற்று திடீரென சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை, ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை தனது குடும்பத்தினருடன் கண்டுகளித்திருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
நேற்றுமுன்தினம் தான் அஜித் ஷாலினியின் 25வது திருமண நாள் நிகழ்வு என்பதால் அந்த உற்சாகத்துடன் தனது மனைவி குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு இந்த கிரிக்கெட் போட்டியை நேரில் ரசிக்க அஜித் வந்துள்ளார் என்றே தெரிகிறது. இதே போட்டியை நேரில் பார்த்த சிவகார்த்திகேயன், அஜித்தை சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் அஜித்துடன் அமர்ந்து கிரிகெட் போட்டியை கண்டு ரசித்தார். எப்போதும் நரைத்த தலைமுடியுடனேயே வெளி இடங்களுக்கு வந்து செல்லும் அஜித் நேற்று தலைமுடிக்கு டை அடித்து இருந்தார் என்பது இன்னொரு ஆச்சர்யம்.