Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: காணாமல் போன நல்ல இயக்குனர்

22 ஏப், 2025 - 11:53 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-The-Missing-Good-Director

ஒரே ஒரு நல்ல படத்தை இயக்கி விட்டு அதன்பின் காணாமல் போன பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் தெரிந்தவர் 'அவள் அப்படித்தான்' ருத்ரையா. அவரைப்போல இன்னும் பலர் இருக்கிறார்கள். அப்படியானவர்களில் ஒருவர் என்.எம்.மொஹிதீன். அவர் இயக்கிய படம் 'முடிவல்ல ஆரம்பம்'.

இந்த படத்தில் ராஜேஷ், ஜோதி, சரத்பாபு, குமரிமுத்து மாஸ்டர் ஹாஜா ஷெரீப் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். 'பாடிவா தென்றலே...', 'தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கை கொடுக்கும் காலமடி' ஆகிய புகழ்பெற்ற பாடல்கள் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றது.

மலையோர கிராமம் ஒன்றில் டீக்கடை நடத்தும் ஒரு விதவை பெண்ணின் மகள் ராதா (ஜோதி), அந்த கடைக்கு அடிக்கடி டீ குடிக்க வரும் லாரி டிரைவர் கண்ணையாவோடு (ராஜேஷ்) காதல் கொள்கிறாள். ஒரு நாள் இரவு இருவரும் உடல்ரீதியாகவும் இணைந்து விடுகிறார்கள்.

இதனால் அவசர அவசரமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் டிரைவர் கண்ணையா காணாமல் போகிறான். கர்ப்பமான ராதா, ஊரை விட்டு ஓடி நகர்புறத்திற்கு வருகிறார். குழந்தையை பெற்று அதை ஒரு ஆசிரமத்தில் போட்டு விட்டு மறுநாள் அதே ஆஸ்ரமத்தில் நர்சாக வேலை செய்து கொண்டே தன் மகனையும் வளர்க்கிறாள். அவளுக்கு மட்டும் தன் மகன் அங்கு வளர்வது தெரியும்.

இந்த நிலையில் அந்த ஆஸ்ரமத்தில் பணியாற்றும் டாக்டர் சரத்பாபு, ராதாவை காதலிக்கிறார். இருவரும் தங்கள் காதலை சொல்ல இருந்த நேரத்தில் காணாமல் போன கண்ணையா கண்பார்வை இழந்தவராக அதே மருத்துவமனைக்கு வருகிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

சிக்கலான கதை, சீரிய திரைக்கதை, என விமர்சகர்களால் போற்றப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது. படத்தை இயக்கிய மொஹிதீன் பற்றியும் எந்த தகவலும் இல்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: முதல் அம்மன் படம்பிளாஷ்பேக்: முதல் அம்மன் படம் 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி 'நிழற்குடையில்' கதை நாயகியாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in