தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

அஜித் குமார் நடித்து தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டியிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் இரண்டாம் வாரம் முடிவிலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ரசிகர்களையும் தாண்டி பொதுவான சினிமா ரசிகர்களையும் இந்த திரைப்படம் வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த திரைப்படம் கடந்த 11 நாட்களில் கிட்டத்தட்ட 150 கோடியை நெருங்கியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 260 கோடியை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் நடித்த படங்களிலேயே தமிழகத்தில் அதிக வசூல் பெற்ற திரைப்படமாக இந்த குட் பேட் அக்லி அமைந்துள்ளது. மேலும் கோடை விடுமுறை இருப்பதால் இந்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க கூடும் என்பதே தமிழகத்தில் உள்ள பல திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக நிலவுகிறது.




