அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் பெப்சிப் அமைப்புக்கும் இடையே நடந்து வரும் முதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி, தயாரிப்பாளர் சங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதோடு இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் தமிழக அரசிடம் முறையிட்டு இருப்பதாகவும் விரைவில் இதற்கு அரசு தீர்வு காணும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சங்க பிரச்னைகள் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அந்த அறிக்கையில் "ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக பிரிந்து இருப்பதை பயன்படுத்தி ஆர்கே செல்வமணி லாபம் அடைந்து வருகிறார்.
தயாரிப்பாளர் சங்கம் தொடங்கிய தொழிலாளர்கள் அமைப்பை கிண்டல் கேலி செய்திருக்கிறார். தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களாக இருந்து பதவி ஆசையால் புதிய சங்கம் தொடங்கியவர்களோடு சேர்ந்து கொண்டு தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிராக ஆர்.கே செல்வமணி செயல்பட்டு வருகிறார்.
இந்தப் பிரச்னைகள் குறித்து சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் விளக்கி கூறியுள்ளனர். இதை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று கமிஷனர் உத்தரவாதம் அளித்துள்ளார்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.