கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தமிழ் சினிமாவில் வந்து நடிக்கும் மற்ற மொழி நடிகர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கூடிக் கொண்டே போகிறது. மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்து நடிக்கும் நடிகர்கள் அந்தக் காலத்திலிருந்தே இருக்கிறது.
தெலுங்கு, ஹிந்தியிலிருந்து ஹீரோயின்கள் அதிகமாக வருவார்கள். மலையாளம், தெலுங்கிலிருந்து வில்லன் நடிகர்கள் அதிகம் வருவார்கள். இப்போது பலதரப்பட்ட கதாபாத்திரங்களுக்கும் வர ஆரம்பித்துள்ளார்கள்.
நேற்று வெளியான 'வீர தீர சூரன் 2' படத்தின் மூலம் மலையாள நடிகரான சூரஜ் வெஞ்சாரமூடு தமிழில் அறிமுகமாகியுள்ளார். மிமிக்ரி கலைஞரான தனது கலை வாழ்க்கையை ஆரம்பித்தவர் தற்போது மலையாள சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' மலையாளப் படம் மூலம் தெரிந்திருப்பார்.
இவரை அடுத்து 'கூலி' படத்தில் மலையாள நடிகரான சவுபின் ஷாகிர் அறிமுகமாக உள்ளார். உதவி இயக்குனராக இருந்து நடிகராக வளர்ந்தவர். 'மஞ்சுமேல் பாய்ஸ்' மலையாளப் படம் இவரை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது.
மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான் உள்ளிட்ட பலரும் அவ்வப்போது தமிழ் சினிமாவில் வந்து நடித்துவிட்டுப் போவார்கள். இந்தப் பட்டியல் வரும் காலங்களில் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.