சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
தமிழ் சினிமாவில் வந்து நடிக்கும் மற்ற மொழி நடிகர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கூடிக் கொண்டே போகிறது. மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்து நடிக்கும் நடிகர்கள் அந்தக் காலத்திலிருந்தே இருக்கிறது.
தெலுங்கு, ஹிந்தியிலிருந்து ஹீரோயின்கள் அதிகமாக வருவார்கள். மலையாளம், தெலுங்கிலிருந்து வில்லன் நடிகர்கள் அதிகம் வருவார்கள். இப்போது பலதரப்பட்ட கதாபாத்திரங்களுக்கும் வர ஆரம்பித்துள்ளார்கள்.
நேற்று வெளியான 'வீர தீர சூரன் 2' படத்தின் மூலம் மலையாள நடிகரான சூரஜ் வெஞ்சாரமூடு தமிழில் அறிமுகமாகியுள்ளார். மிமிக்ரி கலைஞரான தனது கலை வாழ்க்கையை ஆரம்பித்தவர் தற்போது மலையாள சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' மலையாளப் படம் மூலம் தெரிந்திருப்பார்.
இவரை அடுத்து 'கூலி' படத்தில் மலையாள நடிகரான சவுபின் ஷாகிர் அறிமுகமாக உள்ளார். உதவி இயக்குனராக இருந்து நடிகராக வளர்ந்தவர். 'மஞ்சுமேல் பாய்ஸ்' மலையாளப் படம் இவரை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது.
மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான் உள்ளிட்ட பலரும் அவ்வப்போது தமிழ் சினிமாவில் வந்து நடித்துவிட்டுப் போவார்கள். இந்தப் பட்டியல் வரும் காலங்களில் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.