‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
சினிமாவில் காதலும், பிரிவும் சர்வ சாதாரணம். ஒரு காதல் பற்றி கேள்விப்பட்டால் அடுத்து ஏதோ ஒரு பிரிவு பற்றியும் செய்திகள் வரும். தற்போது வந்துள்ளது ஒரு காதல் செய்தி.
2020ல் வெளிவந்து வெற்றி பெற்ற 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரித்து வர்மா. விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த பத்து வருடங்களாக தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.
அவருக்கும் தெலுங்கு நடிகரான வைஷ்ணவ் தேஜ் என்பவருக்கும் காதல் என கிசுகிசு பரவி வருகிறது. தெலுங்கு நடிகரான சிரஞ்சீவியின் சகோதரி மகன் தான் வைஷ்ணவ் தேஜ். 'உப்பெனா' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர்.
ரித்து, வைஷ்ணவ் இருவரும் இணைந்து நடித்ததில்லை என்றாலும் அவர்கள் வெளியில் சந்தித்து தங்களது நட்பை வளர்த்துக் கொண்டார்கள் என்கிறார்கள். அந்த நட்பு தற்போது காதலாக மாறியுள்ளது என்று தகவல்.