சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் | ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருந்த அந்நியன் ஹிந்தி ரீமேக் டிராப்பா... | ஸ்ரீ லீலாவை பின்தொடரும் 11 மில்லியன் பேர் : இரண்டே மாதங்களில் 2 மில்லியன் அதிகரிப்பு | சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்த ஜோதிகா | ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் படம் | அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்? | விமல் நடிப்பில் 'ஓம் காளி ஜெய் காளி' | பிரபாஸிற்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போஸ் | மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ஜீவா | ஆர்.டி.எக்ஸ் இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான் |
சினிமாவின் முதல் 20 ஆண்டுகளில் திரையரங்குளில் மாலை 6 மணி மற்றும் 10 மணி என இரண்டு காட்சிகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. பகல் காட்சியை தொடங்கி வைத்தது 'ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி' என்கிற படம். எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி நடித்த முக்கியமான படம். இதில் அவர் சிந்தாமணியாக டைட்டில் கேரக்டரில் நடித்தார். நாடக காமெடி நடிகர் பி.எஸ்.கோவிந்தன் நாயகனாக நடித்தார். இவர்களுடன் எஸ்.வரலட்சுமி, மாதுரி தேவி, பி.கே.சரஸ்வதி, ஆர்.பத்மா, காளி என்.ரத்னம், சி.டி.ராஜகாந்தம், ஆர்.பாலசுப்ரமணியம், டி.எஸ்.துரைராஜ், கே.கே. பெருமாள் உள்பட பலர் நடித்தார்கள். மார்டன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து, இயக்கி இருந்தார்.
ஆண்களை கேள்வி கேட்டு சரியான பதில் சொல்லாதவர்களின் தலையை வெட்டிய சிந்தாமணி என்ற இளவரசியை பற்றிய நாட்டுப்புற கதையை மையமாக கொண்டு இந்த படம் உருவானது. இது ஹீரோயின் சப்ஜெக்ட் படம் என்பதால் பெரிய ஆண் நடிகர்களுக்கு வாய்ப்பு இல்லை. நாட்டுப்புற கதையாக இருந்தாலும் பெண் விடுதலை பற்றி பேசிய இந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியவர் கவிஞர் பாரதிதாசன்.
'சம்பூர்ண ராமாயணம்' படத்திற்கு பிறகு இதுதான் நீளமான படம் என்கிறார்கள் (20,050 அடி). படம் வெளியாகி எல்லா இடங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. இரவு 10 மி காட்சி நள்ளிரவை தாண்டியும் செல்வதால் பார்வையாளர்கள் வீடு திரும்ப சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து அரசுக்கு தயாரிப்பாளர் சுந்தரம் கடிதம் எழுதினார். 10 மணி காட்சிக்கு பதிலாக பகல் 1 மணிக்கு காட்சி நடத்த அனுமதி கோரி இருந்தார்.
இதனை ஏற்ற அரசு சோதனை முயற்சியாக சென்னை பிராட்வே தியேட்டரில் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் மட்டும் பகல் ஒரு மணி காட்சி (மேட்னி ஷோ) நடத்த ஒப்புக் கொண்டது. பின்னர் 3 ஷோக்கள் நடத்த ஒப்புக் கொண்டது. பகல் காட்சிக்கு ஏற்ப தியேட்டரும் மாற்றி அமைக்கப்பட்டது.
வி.என்.ஜானகி அம்மையார் முதல்வரான போது இந்த படத்தின் நீளத்தை குறைத்து வண்ணகலரில் வெளியிடும் திட்டம் துவங்கியது. ஆனால் குறுகிய காலத்தில் அவர் பதவி இழந்து விடவே அந்த திட்டம் கைவிடப்பட்டது.