இயக்குனர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை | ஜேசன் சஞ்சயின் ‛சிக்மா' படப்பிடிப்பு நிறைவு : டீசர் டிச., 23ல் வெளியீடு | அப்பா ஆகப் போகிறாரா நாகசைதன்யா? நாகார்ஜுனா கொடுத்த பதில் | பிரிவு பரபரப்புக்கு நடுவே செல்வராகவன் போட்ட பதிவு | ரீரிலீசில் ஒரு வாரத்தில் ரஜினியின் படையப்பா செய்த வசூல் எவ்வளவு? | 4 இடியட்ஸ் ஆக உருவாகும் 3 இடியட்ஸ் படத்தின் 2ம் பாகம் ? | 15 படங்களுக்குள் நுழைந்த 'ஹோம்பவுண்ட்', அடுத்த இறுதிச் சுற்றில் நுழையுமா ? | 'ஓஜி' இயக்குனருக்கு பவன் கல்யாண் கார் பரிசளித்தது ஏன்? | பெண் செய்யும்போது மட்டும் நிறைய எதிர்மறை விமர்சனங்கள் : நிகிலா விமல் | அதனால்தான் மம்முட்டி வித்தியாசமானவர் : துருவ் விக்ரம் பாராட்டு |

தங்கலான், அமரன், வணங்கான் படங்களுக்குப் பிறகு தற்போது தனுஷ் இயக்கி திரைக்கு வந்திருக்கும் ‛நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' மற்றும் தற்போது அவர் இயக்கி நடித்து வரும் ‛இட்லி கடை' படத்திற்கும் இசையமைத்துள்ளார் ஜி.வி .பிரகாஷ் குமார். அதோடு அவர் ஹீரோவாக நடித்துள்ள ‛கிங்ஸ்டன்' என்ற படம் மார்ச் 7ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படி நடிப்பு, இசை என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, தனுஷ் நடிப்புடன் அவரை ஒப்பிட்டு ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
அதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் பதிலளிக்கையில், ‛‛சினிமாவில் குழந்தை பாடகராக தோன்றி அதன்பிறகு இசையமைப்பாளராகி ஒரு நிலையான இடத்தை பிடிப்பதற்கு நிறைய கஷ்டங்களை சந்தித்தேன். அதேபோல் தொடர்ந்து படங்களில் நடித்தும் வருகிறேன். ஆனால் தனுஷ் ஒரு சிறந்த நடிகர். அவரது நடிப்புக்கு என்னால் ஈடு கொடுத்து நடிக்க முடியாது. அந்த அளவுக்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் தனுஷ்'' என்று கூறியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார்.