பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை | இன்ஸ்டாகிராம் புரமோஷனை கூட தவிர்க்கும் இளம் நடிகை ; இயக்குனர் விரக்தி | முடக்கப்பட்ட எக்ஸ் தளத்தை மீட்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா கோஷல் |
பாலிவுட்டின் பிரபல நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி - நடிகை ஷர்மிளா தாகூரின் மகன் சைப் அலிகான். இவர் ஏராளமான ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். நடிகை கரீனா கபூரை மணந்த இவர் மஹாராஷ்டிராவின் மும்பையில், பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பாந்த்ராவில், 'சத்குரு ஷரண்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சைப் அலிகான் வீட்டுக்குள் நள்ளிரவில் நுழைந்த கொள்ளையன் அவரை, ஆறு முறை கத்தியால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சைப் அலிகான் வீட்டு பணிப்பெண் ஆயா எலியாமா பிலிப் கூறியதாவது : குளியலறையில் ஒரு நபர் மறைந்து இருப்பதை பார்த்தேன். யார் என்பதை பார்க்க விரைந்து வந்தேன். அந்த நபர் சைப் அலிகான் மகன் ஜெயின் அறைக்குள் வந்தார். நான் சத்தமிட்டதும் என்னை பிளேடால் தாக்கினர். என் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. நான் அவரிடம் என்ன வேண்டும் என்று கேட்டேன். அவர் ரூ.1 கோடி வேண்டும் என்று மிரட்டினார் என்றார். மற்றொரு வீட்டு, உதவியாளரும் அங்கு வந்ததால், அந்த மர்ம நபர் தப்பி ஓட்டம் பிடித்தார். இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி.,யில் பதிவாகியது.
கைது
சைப் அலிகானை வீடு புகுந்து கத்தியால் குத்தியவரை இன்று (ஜன.,17) போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை பாந்த்ரா போலீஸ் ஸ்டேஷனில் வைத்து, போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.