எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் |
தமிழில் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'தங்கலான்' படத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன், அதை அடுத்து கார்த்தி நடிக்கும் 'சர்தார்-2' படத்தில் நடித்தவர், தற்போது தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் 'ராஜா சாப்' என்ற படத்தில் நடித்து வருகிறார். மாருதி இயக்கும் இந்த படத்தில் தனது வேடம் குறித்து மாளவிகா மோகனன் கூறுகையில், ''பிரபாஸுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று எனது கனவு தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே கிடைத்தது மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதோடு இந்த ராஜா சாப் படத்தில் நானே எதிர்பாராத வகையில் மிகவும் சவாலான கதாபாத்திரம் கிடைத்துள்ளது.
அதனால் இந்த படத்திற்கு பிறகு என் மீது நம்பிக்கை வைத்து இயக்குனர் இதுபோன்று தனித்துவமான கதாபாத்திரங்களை தருவார்கள். இந்த ராஜா சாப் படம் தெலுங்கில் எனக்கு மிகப்பெரிய என்ட்ரியை ஏற்படுத்திக் கொடுக்கும்'' என்று தெரிவித்திருக்கிறார். திகில் கலந்த காமெடி கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் நிதி அகர்வாலும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.