இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
1940 மற்றும் 50களில் தமிழ், ஹிந்தி படங்களைத் தயாரித்து, இயக்கி, நடித்து வந்தவர் மும்பையைச் சேர்ந்த பாக்வன். இவரை 'பாக்வன் தாதா' என்றும் சொல்வார்கள். 1940ம் ஆண்டு அவர் இயக்கிய தமிழ் படம்தான் 'ஜயக்கொடி'. இந்த படத்தில் கே.டி.ருக்மணி, கே.நடராஜன் நடித்திருந்தார்கள். பி.வி.சாமி, எஸ்.ஆர்.சாரங்கன் வசனங்களை எழுதினர். அஹமத்துல்லா ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு சி.ராமச்சந்திரா இசை அமைத்தார். பாடல்களை சி.முருகேசன் எழுதினார்.
படத்தின் கதை இதுதான்: வரதட்சணை கொடுக்க முடியாததால் ஏழைப்பெண் ராஜத்துக்கு (ருக்மணி), திருமணமாகவில்லை. இதற்கிடையே பண ஆசை கொண்ட கந்துவட்டிக்காரன், ராஜமின் தந்தையைக் கொன்று வீட்டுக்கு தீ வைக்கிறான். இதனால் ஆவேசம் கொள்ளும் ராஜம், வரதட்சணைக்கு எதிராகக் களமிறங்குகிறாள். வரதட்சணை கேட்கும் மணமகன்கள் மர்மமான முறையில் காணாமல் போகிறார்கள்.
வரதட்சணையால் பாதிக்கப்பட்ட ராஜம் தனது பெயரை (ஜெ)ஜயக்கொடி என்று மாற்றிக் கொண்டு பெண் தீவிரவாதியாகி வரதட்சணை கேட்கிறவர்களுக்கு தானே தண்டனை தருவதுதான் படத்தின் கதை. பிற்காலத்தில் வந்த 'நான் சிவப்பு மனிதன்', 'சட்டம் ஒரு இருட்டரை' போன்ற படங்களுக்கு இதுதான் முன்னோடி. படத்தின் கதையை பார்த்து மக்கள் மிரண்டு போனார்கள். ருக்மணி அதிரடி ஆக்ஷன் ஹீரோயின் ஆனார். நாயகனாக நடித்த கே.நடராஜன் பின்னர் ஜயக்கொடி நடராஜன் ஆனார்.