300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
சென்னை:பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து சிலர் அவதுாறான தகவல்களை சமூகவலைதளத்தில் பரப்பியுள்ளதாகவும், அதை அதிகபட்சம் 24 மணி நேரத்தில் நீக்காவிட்டால், சட்ட நடவடிக்கை பாயும்' என ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கறிஞர் நர்மதா சம்பத் நோட்டீஸ் வெளியிட்டுள்ளார். அதை தன் எக்ஸ் தள பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.
நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏ.ஆர்.ரஹ்மான் சில நாட்களுக்கு முன் அவரது விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த தகவலை முன்னணி நாளிதழ்கள் உட்பட பலரும் செய்தியாக வெளியிட்டனர். ஆனால், சில சமூக வலைதள பயன்பாட்டாளர்களும், பல யூ-டியூபர்களும், ஏ.ஆர்.ரஹ்மானின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அவதுாறு கருத்துகளை, தங்களின் சொந்தக் கற்பனைக்கு உட்படுத்தி, பல கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், குடும்பத்தாரை புண்படுத்தும் வகையிலும், வெளியிடப்பட்ட அப்பதிவுகளில் துளி அளவும் உண்மையில்லை. இது ஒரு மலிவான செயல்.
அடுத்த ஒரு மணி நேரம் அல்லது அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து குறித்த அவதுாறு கருத்துகளை சமூக வலைதளங்கள், யூ-டியூப்பிலிருந்து அகற்ற வேண்டும். அப்படி அகற்றாதவர்கள் மீது பாரதிய நியாயா சன்ஹிதா 356வது பிரிவின் கீழ் அவதுாறு வழக்கு தொடுக்கப்படும். இதன் மூலம் குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். குறிப்பாக யூ-டியூப், எக்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ஆன்லைன் செய்தி இணையதளங்கள் உள்ளிட்ட தளங்களில் இயங்கும் தனி நபர்கள், நிறுவனங்களுக்காக இந்த நோட்டீஸ் அனுப்பபடுகிறது. தவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.