கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
சூர்யா நடிப்பில் சிவா இயக்கி உள்ள கங்குவா படத்தின் இசை விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நவம்பர் 14ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், நட்டி நடராஜ், கே.எஸ். ரவிக்குமார், கோவை சரளா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி விட்டதால் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமடைந்திருக்கிறது. அதோடு இந்த படத்திற்காக பல வெளியூர்களுக்கு சென்று புரோமோஷனில் ஈடுபட்டு வருகிறார் சூர்யா. மேலும், சூர்யா, கார்த்தி நடிக்கும் படங்களின் பூஜை, இசை வெளியீட்டு விழாக்களில் அவர்களின் தந்தையான நடிகர் சிவக்குமார் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று கங்குவா இசை விழாவிலும் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா பற்றிய ஒரு கடந்த கால தகவலை மேடையிலே சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் பேசும்போது, ‛‛சூர்யாவை பி.காம் படிப்பதற்காக சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் சீட் கேட்டு சென்ற போது இடம் தர மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு நான் பிரின்சிபாலை சந்தித்து என்ன பிரச்னை, எதற்காக என் மகனுக்கு சீட்டு தர மாட்டேன் என்று சொல்கிறீர்கள்? என கேட்டேன். அப்போது சிவாஜி கணேசனின் மகன் பி.காம் முடிக்காமல் பாதியிலேயே சென்று விட்டார். இன்னும் சில பிரபலங்களின் மகன்களும் இப்படித்தான் பாதியிலேயே சென்று விட்டார்கள் என்று சொன்னார்.
அதற்கு நான் என் பையன் அப்படி எல்லாம் செல்ல மாட்டார். கண்டிப்பாக பி.காம் முழுமையாக படித்து முடிப்பான் என்று சொல்லி சீட் வாங்கினேன். ஆனால் பி.காம் கடைசி ஆண்டில் சூர்யா நான்கு அரியர் வைத்திருந்தார். அப்போது அவரிடத்தில் என் மானத்தை வாங்கிடாதே, எப்படியாவது படித்து அரியர்சை எழுதி விடு என்று சொன்னேன். அதன்படி சூர்யாவும் கஷ்டப்பட்டு படித்து அரியர்சை எழுதி பி.காம் டிகிரி வாங்கி விட்டான்'' என்று கூறினார்.
இப்படி தான் அரியர்ஸ் வைத்திருந்த விவகாரத்தை பொதுமேடையில் தனது தந்தை சொல்லிவிட்டதால் விழாவுக்கு வந்திருந்தோர் அனைவரும் தன்னை நோக்கி பார்த்ததை அடுத்து கைகளால் தனது முகத்தை மறைத்துக் கொண்டார் சூர்யா.