காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
மோகன்லால் தற்போது மலையாளத்தில் பிரித்விராஜ் டைரக்ஷனில் நடித்து வரும் லூசிபர் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் அந்த படத்தின் படப்பிடிப்பு வெவ்வேறு கட்டமாக நடக்க இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் மோகன்லால் நடித்து வரும் அவரது 360வது படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கி உள்ளது.
இந்த படத்தில் மோகன்லாலுடன் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கிறார் நடிகை ஷோபனா. இந்த படத்தை தருண் மூர்த்தி என்பவர் இயக்குகிறார்.. இவர் கடந்த இரண்டு வருடங்களில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்த ஆபரேஷன் ஜாவா மற்றும் சவுதி வெள்ளக்கா ஆகிய படங்களை இயக்கியவர். மோகன்லால் இந்த படத்தில் ஒரு பழைய அம்பாசிடர் கார் ஓட்டும் சண்முகம் என்கிற டிரைவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.