'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
மோகன்லால் தற்போது மலையாளத்தில் பிரித்விராஜ் டைரக்ஷனில் நடித்து வரும் லூசிபர் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் அந்த படத்தின் படப்பிடிப்பு வெவ்வேறு கட்டமாக நடக்க இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் மோகன்லால் நடித்து வரும் அவரது 360வது படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கி உள்ளது.
இந்த படத்தில் மோகன்லாலுடன் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கிறார் நடிகை ஷோபனா. இந்த படத்தை தருண் மூர்த்தி என்பவர் இயக்குகிறார்.. இவர் கடந்த இரண்டு வருடங்களில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்த ஆபரேஷன் ஜாவா மற்றும் சவுதி வெள்ளக்கா ஆகிய படங்களை இயக்கியவர். மோகன்லால் இந்த படத்தில் ஒரு பழைய அம்பாசிடர் கார் ஓட்டும் சண்முகம் என்கிற டிரைவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.