படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
சினிமா தமிழகத்துக்குள் வந்ததும் முதலில் புராண கதைகள்தான் சினிமா ஆனது. பின்னர் சமூக கதைகள் வந்தது. இந்த வரிசையில் இப்போது கொண்டாடப்படும் பக்கா ஆக்ஷன் படமாக முதலில் வெளிவந்தது 'மெட்ராஸ் மெயில்' என்கிற படம். நாயகன், நாயகி, காதல், அதற்கு எதிராக ஒரு வில்லன். அந்த வில்லனை எதிர்த்து போராடும் ஹீரோ. காதலுக்கு டூயட் பாடல்கள், வில்லனோடு அனல் பறக்கும் சண்டை என்கிற இந்த பார்முலாவை தொடங்கி வைத்த படம் இது.
படத்தின் நாயகன் ரொம்ப நல்ல இளைஞர். எல்லோருக்கும் உதவி செய்யும் பரமோபகாரி. அவருக்கு ஜமீன்தார் மகளான நாயகிக்கும் முதலில் மோதல் உருவாகி பின்னர் அது காதலாகிறது. நாயகியின் அழகில் மயங்கும் மந்திரி ஒருவர் அவளை திருமணம் செய்ய நினைக்கிறார். இதற்கு இடையூறாக இருக்கும் ஹீரோ மீது பழிசுமத்தி சிறைக்கு அனுப்புகிறார். சிறையில் இருந்து தப்பும் ஹீரோ தனது பெயரை 'மெட்ராஸ் மெயில்' என்று மாற்றிக் கொண்டு அமைச்சரை பழிவாங்கி, நாயகியை மணந்து மக்களிடையே மெட்ராஸ் மெயில் என கொண்டாடப்படுகிற ஒருவராக மாறுகிறார். இதுதான் படத்தின் கதை. இதே கதையில் வரும் வாரம்கூட ஒரு படம் வரக் கூடும்.
1936ம் ஆண்டு வெளியான இந்த படத்தை சி.எம்.திரிவேதி இயக்கியிருந்தார் அப்போது தற்காப்பு கலைஞராக இருந்த பேட்டலிங் மணி என்பவர் நாயகனாக நடித்தார். அவரே கதையையும் எழுதியிருந்தார். நாயகியாக டி.என்.மீனாட்சி நடித்திருந்தார். படமும் நல்ல வரவேற்பை பெற்றது.