கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
சினிமா தமிழகத்துக்குள் வந்ததும் முதலில் புராண கதைகள்தான் சினிமா ஆனது. பின்னர் சமூக கதைகள் வந்தது. இந்த வரிசையில் இப்போது கொண்டாடப்படும் பக்கா ஆக்ஷன் படமாக முதலில் வெளிவந்தது 'மெட்ராஸ் மெயில்' என்கிற படம். நாயகன், நாயகி, காதல், அதற்கு எதிராக ஒரு வில்லன். அந்த வில்லனை எதிர்த்து போராடும் ஹீரோ. காதலுக்கு டூயட் பாடல்கள், வில்லனோடு அனல் பறக்கும் சண்டை என்கிற இந்த பார்முலாவை தொடங்கி வைத்த படம் இது.
படத்தின் நாயகன் ரொம்ப நல்ல இளைஞர். எல்லோருக்கும் உதவி செய்யும் பரமோபகாரி. அவருக்கு ஜமீன்தார் மகளான நாயகிக்கும் முதலில் மோதல் உருவாகி பின்னர் அது காதலாகிறது. நாயகியின் அழகில் மயங்கும் மந்திரி ஒருவர் அவளை திருமணம் செய்ய நினைக்கிறார். இதற்கு இடையூறாக இருக்கும் ஹீரோ மீது பழிசுமத்தி சிறைக்கு அனுப்புகிறார். சிறையில் இருந்து தப்பும் ஹீரோ தனது பெயரை 'மெட்ராஸ் மெயில்' என்று மாற்றிக் கொண்டு அமைச்சரை பழிவாங்கி, நாயகியை மணந்து மக்களிடையே மெட்ராஸ் மெயில் என கொண்டாடப்படுகிற ஒருவராக மாறுகிறார். இதுதான் படத்தின் கதை. இதே கதையில் வரும் வாரம்கூட ஒரு படம் வரக் கூடும்.
1936ம் ஆண்டு வெளியான இந்த படத்தை சி.எம்.திரிவேதி இயக்கியிருந்தார் அப்போது தற்காப்பு கலைஞராக இருந்த பேட்டலிங் மணி என்பவர் நாயகனாக நடித்தார். அவரே கதையையும் எழுதியிருந்தார். நாயகியாக டி.என்.மீனாட்சி நடித்திருந்தார். படமும் நல்ல வரவேற்பை பெற்றது.