சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
தமிழ் சினிமாவில் காமெடி டிராக் எழுதி புகழ்பெற்றவர் ஏ.வீரப்பன். ஆனால் அவர் ஒரு நடிகர் என்பது பலர் அறியாத ஒன்று. 1956ம் ஆண்டு வெளியான 'தெனாலிராமன்' படம் தொடங்கி, கலங்கரை விளக்கம், ஒளிவிளக்கு, குடியிருந்த கோவில், பட்டணத்து ராஜாக்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு காமெடி டிராக் எழுதியுள்ளார். பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், உதயகீதம், இதயகோவில், கரகாட்டக்காரன், சின்னதம்பி போன்றவை அவற்றில் முக்கியமானவை.
இதுதவிர அவர் 'தெய்வீக ராகங்கள்' என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், ரோஜா ரமணி, வடிவுக்கரசி நாயகியாகவும் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். காமெடி ஹாரர் ஜானர்னரில் உருவான படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு ஏ.வீரப்பன் படமும் இயக்கவில்லை.
பல வருடங்கள் சினிமாவில் பணியாற்றினாலும் கடைசி காலத்தை வறுமையில் கழித்தார். கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து காமெடி டிராக் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தும், அவரிடமிருந்து எந்த உதவியையும் அவர் பெறவில்லை.