நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் காமெடி டிராக் எழுதி புகழ்பெற்றவர் ஏ.வீரப்பன். ஆனால் அவர் ஒரு நடிகர் என்பது பலர் அறியாத ஒன்று. 1956ம் ஆண்டு வெளியான 'தெனாலிராமன்' படம் தொடங்கி, கலங்கரை விளக்கம், ஒளிவிளக்கு, குடியிருந்த கோவில், பட்டணத்து ராஜாக்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு காமெடி டிராக் எழுதியுள்ளார். பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், உதயகீதம், இதயகோவில், கரகாட்டக்காரன், சின்னதம்பி போன்றவை அவற்றில் முக்கியமானவை.
இதுதவிர அவர் 'தெய்வீக ராகங்கள்' என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், ரோஜா ரமணி, வடிவுக்கரசி நாயகியாகவும் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். காமெடி ஹாரர் ஜானர்னரில் உருவான படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு ஏ.வீரப்பன் படமும் இயக்கவில்லை.
பல வருடங்கள் சினிமாவில் பணியாற்றினாலும் கடைசி காலத்தை வறுமையில் கழித்தார். கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து காமெடி டிராக் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தும், அவரிடமிருந்து எந்த உதவியையும் அவர் பெறவில்லை.