கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கு பிறகு படங்களை கவனமாக தேர்வு செய்து நடித்து வரும் ஆர்யா தற்போது மிஸ்டர் எக்ஸ் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழியில் உருவாகும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார் ஆர்யா. மார்க் ஆண்டனி படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை, மலையாளத்தில் தியான் மற்றும் தமிழில் ஆர்ஜே பாலாஜி நடித்த ரன் பேபி ரன் ஆகிய படங்களை இயக்கிய ஜிஎன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.
மோகன்லால் நடித்த லூசிபர் மற்றும் தற்போது அதன் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் எம்புரான் ஆகிய படங்களுக்கு கதை எழுதிய நடிகரும் கதாசிரியருமான முரளிகோபி இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளதுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நிகிலா விமல் நடிக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியான குருவாயூர் அம்பல நடையில் படத்தின் மூலம் அழகிய லைலாவாக கவனம் ஈர்த்த நிகிலா விமல் முதன்முறையாக ஆர்யாவுடன் இந்த படத்திற்காக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.