மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கு பிறகு படங்களை கவனமாக தேர்வு செய்து நடித்து வரும் ஆர்யா தற்போது மிஸ்டர் எக்ஸ் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழியில் உருவாகும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார் ஆர்யா. மார்க் ஆண்டனி படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை, மலையாளத்தில் தியான் மற்றும் தமிழில் ஆர்ஜே பாலாஜி நடித்த ரன் பேபி ரன் ஆகிய படங்களை இயக்கிய ஜிஎன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.
மோகன்லால் நடித்த லூசிபர் மற்றும் தற்போது அதன் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் எம்புரான் ஆகிய படங்களுக்கு கதை எழுதிய நடிகரும் கதாசிரியருமான முரளிகோபி இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளதுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நிகிலா விமல் நடிக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியான குருவாயூர் அம்பல நடையில் படத்தின் மூலம் அழகிய லைலாவாக கவனம் ஈர்த்த நிகிலா விமல் முதன்முறையாக ஆர்யாவுடன் இந்த படத்திற்காக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.