சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கு பிறகு படங்களை கவனமாக தேர்வு செய்து நடித்து வரும் ஆர்யா தற்போது மிஸ்டர் எக்ஸ் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழியில் உருவாகும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார் ஆர்யா. மார்க் ஆண்டனி படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை, மலையாளத்தில் தியான் மற்றும் தமிழில் ஆர்ஜே பாலாஜி நடித்த ரன் பேபி ரன் ஆகிய படங்களை இயக்கிய ஜிஎன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.
மோகன்லால் நடித்த லூசிபர் மற்றும் தற்போது அதன் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் எம்புரான் ஆகிய படங்களுக்கு கதை எழுதிய நடிகரும் கதாசிரியருமான முரளிகோபி இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளதுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நிகிலா விமல் நடிக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியான குருவாயூர் அம்பல நடையில் படத்தின் மூலம் அழகிய லைலாவாக கவனம் ஈர்த்த நிகிலா விமல் முதன்முறையாக ஆர்யாவுடன் இந்த படத்திற்காக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.