கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக அங்கிருந்த சில கிராமங்களில் 400க்கும் மேற்பட்ட மனிதர்கள் மண்ணில் புதைந்தும் இடிபாடுகளில் சிக்கியும் பலியாகினர். பல நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டம் ஆகிவிட்டன.
கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து நடைபெற்று வந்த மீட்ப பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது. இன்னொரு பக்கம் இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற அளவு உதவித்தொகையை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் இந்த வயநாடு நிலச்சரிவு பாதிப்பு நிதியாக தானும் தனது மகன் ராம்சரணும் இணைந்து ஒரு கோடி ரூபாய் முதல் கட்ட தொகையாக வழங்குவதாக இரண்டு தினங்களுக்கு முன் நடிகர் சிரஞ்சீவி அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று தனி விமான மூலம் நேரடியாகவே திருவனந்தபுரம் வந்து கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார். கேரளாவில் ஏற்பட்ட பாதிப்பிற்காக இப்படி ஆந்திராவில் இருந்து சிரஞ்சீவி நேரில் வந்து உதவித்தொகை வழங்கியுள்ளது கேரள மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.