திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் |
விஷால் தனது தயாரிப்பு நிறுவனத்திற்காக லைகா நிறுவனத்திடம் வாங்கிய 26 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தவில்லை என்ற வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் லைகா நிறுவனம் மீது விஷால் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'சண்டக்கோழி- 2' படத்தை வாங்கி வெளியிட்ட லைகா நிறுவனம் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலைட் வெளியீடு உரிமைக்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை செலுத்தாததால் அபராத தொகையுடன் சேர்த்து 4.88 கோடியை நான் செலுத்தியுள்ளேன். நான் செலுத்திய ஜிஎஸ்டி தொகை மற்றும் அபராதத் தொகையை வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய்க்கு உத்தரவாதம் வழங்குமாறு லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏற்கெனவே ஒரு வழக்கு நடந்து வருவதால் இந்த பிரச்னையை கோர்ட்டுக்கு வெளியே பேசி தீர்க்கும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் இந்த இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.