''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
தெலுங்குத் திரையுலகத்தில் பெரிய நடிகர்களின் புதிய படங்கள் வெளிவரும் போது டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள தெலங்கானா, ஆந்திர அரசுகள் அனுமதி அளிக்கும்.
கடந்த வாரம் வெளியான 'கல்கி 2898 ஏடி' படத்திற்குக் கூட இரண்டு அரசுகளும் இப்படி அனுமதி அளித்தன. இந்நிலையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் இப்படியான டிக்கெட் கட்டண உயர்வுக்கு புதிதாக இரண்டு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
டிக்கெட் கட்டண உயர்வு கேட்கும் படங்களின் ஹீரோக்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இரண்டு வீடியோக்களில் நடித்துக் கொடுத்தால் மட்டுமே இனி கட்டண உயர்வு அனுமதிக்கப்படும் என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
சைபர் கிரைம், போதைப் பொருளுக்கு எதிரான கருத்துக்களை அந்த வீடியோக்களில் சொல்ல வேண்டும். அவற்றை டிக்கெட் கட்டண உயர்வுக்கான விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். அது மட்டுமல்ல படங்களின் பிரிமீயர் காட்சிகளின் போது அந்த வீடியோக்களை தியேட்டர்களில் திரையிட வேண்டும் என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.