300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
தெலுங்குத் திரையுலகத்தில் பெரிய நடிகர்களின் புதிய படங்கள் வெளிவரும் போது டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள தெலங்கானா, ஆந்திர அரசுகள் அனுமதி அளிக்கும்.
கடந்த வாரம் வெளியான 'கல்கி 2898 ஏடி' படத்திற்குக் கூட இரண்டு அரசுகளும் இப்படி அனுமதி அளித்தன. இந்நிலையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் இப்படியான டிக்கெட் கட்டண உயர்வுக்கு புதிதாக இரண்டு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
டிக்கெட் கட்டண உயர்வு கேட்கும் படங்களின் ஹீரோக்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இரண்டு வீடியோக்களில் நடித்துக் கொடுத்தால் மட்டுமே இனி கட்டண உயர்வு அனுமதிக்கப்படும் என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
சைபர் கிரைம், போதைப் பொருளுக்கு எதிரான கருத்துக்களை அந்த வீடியோக்களில் சொல்ல வேண்டும். அவற்றை டிக்கெட் கட்டண உயர்வுக்கான விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். அது மட்டுமல்ல படங்களின் பிரிமீயர் காட்சிகளின் போது அந்த வீடியோக்களை தியேட்டர்களில் திரையிட வேண்டும் என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.