2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
'கேஜிஎப்' இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான படம் 'சலார்'. இரண்டு பாகங்களாக இப்படம் வெளியாகும் என்று அறிவித்தார்கள். முதல் பாகம் வெளியான நிலையில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் சீக்கிரமே ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பிரபாஸ் அடுத்தடுத்து சில படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. இதனிடையே, இரண்டாம் பாகத்தை டிராப் செய்ய உள்ளதாக கடந்த சில வாரங்களாக 'சலார் 2' பற்றி சில செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.
இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸ் இடையே இரண்டாம் பாகக் கதையில் சில கருத்து மோதல்கள் ஏற்பட்டதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ஜுனியர் என்டிஆர் படத்தை உடனடியாக இயக்கும் முடிவிற்கு பிரசாந்த் நீல் சென்றதாக சொல்கிறார்கள். எனவே, 'சலார் 2' படம் டிராப் ஆவது உறுதி என டோலிவுட்டில் பேசத் தொடங்கிவிட்டார்கள்.
இருவரையும் சமரசம் செய்து 'சலார் 2' படத்தை உருவாக்குவார்களா என்பது போகப் போகத்தான் தெரியும்.