300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
'கேஜிஎப்' இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான படம் 'சலார்'. இரண்டு பாகங்களாக இப்படம் வெளியாகும் என்று அறிவித்தார்கள். முதல் பாகம் வெளியான நிலையில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் சீக்கிரமே ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பிரபாஸ் அடுத்தடுத்து சில படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. இதனிடையே, இரண்டாம் பாகத்தை டிராப் செய்ய உள்ளதாக கடந்த சில வாரங்களாக 'சலார் 2' பற்றி சில செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.
இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸ் இடையே இரண்டாம் பாகக் கதையில் சில கருத்து மோதல்கள் ஏற்பட்டதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ஜுனியர் என்டிஆர் படத்தை உடனடியாக இயக்கும் முடிவிற்கு பிரசாந்த் நீல் சென்றதாக சொல்கிறார்கள். எனவே, 'சலார் 2' படம் டிராப் ஆவது உறுதி என டோலிவுட்டில் பேசத் தொடங்கிவிட்டார்கள்.
இருவரையும் சமரசம் செய்து 'சலார் 2' படத்தை உருவாக்குவார்களா என்பது போகப் போகத்தான் தெரியும்.