மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் படப்பிடிப்பு நடத்தி அதை சுற்றி கதை களம் அமைத்து அவ்வப்போது படங்கள் வந்திருக்கிறது. அவற்றில் முக்கியமான படம் 'கண்காட்சி'. 1971ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் அப்போது தென்சென்னை மற்றும் வடசென்னையில் நடந்த இரண்டு கண்காட்சிகளில் மட்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு 'கண்காட்சி' என்ற பெயரிலேயே வெளியானது.
இந்த படத்தை ஏ.பி.நாகராஜன் இயக்கி இருந்தார். சிவகுமார், குமாரி பத்மினி, மனோரமா, சிஐடி சகுந்தலா, கள்ளபார்ட் நடராஜன், சுருளிராஜன் நடித்திருந்தார்கள். சிவகுமார்-குமாரி பத்மினி ஒரு ஜோடியாகவும், கள்ளபார்ட் நடராஜன்--ஏ.சகுந்தலா ஒரு ஜோடியாகவும், சுருளிராஜன்-மனோரமா மற்றொரு ஜோடியாகவும் நடித்த்திருந்தனர். மற்றும் கே.டி.சந்தானம், ரி.என்.சிவதாணு, வி.கோபாலகிருஷ்ணன், டைப்பிஸ்ட் கோபு, மாஸ்டர் தசரதன், ஏ.கே.வீராச்சாமி, பேபி ராணி, ஹெரான் ராமசாமி ஆகியோரும் நடித்திருந்தார்கள். பீட்டர் என்ற நாய் ஒன்றும் நடித்துள்ளது. குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்திருந்தார். படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டானது. படமும் வெற்றி பெற்றது.