மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' |
ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் படப்பிடிப்பு நடத்தி அதை சுற்றி கதை களம் அமைத்து அவ்வப்போது படங்கள் வந்திருக்கிறது. அவற்றில் முக்கியமான படம் 'கண்காட்சி'. 1971ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் அப்போது தென்சென்னை மற்றும் வடசென்னையில் நடந்த இரண்டு கண்காட்சிகளில் மட்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு 'கண்காட்சி' என்ற பெயரிலேயே வெளியானது.
இந்த படத்தை ஏ.பி.நாகராஜன் இயக்கி இருந்தார். சிவகுமார், குமாரி பத்மினி, மனோரமா, சிஐடி சகுந்தலா, கள்ளபார்ட் நடராஜன், சுருளிராஜன் நடித்திருந்தார்கள். சிவகுமார்-குமாரி பத்மினி ஒரு ஜோடியாகவும், கள்ளபார்ட் நடராஜன்--ஏ.சகுந்தலா ஒரு ஜோடியாகவும், சுருளிராஜன்-மனோரமா மற்றொரு ஜோடியாகவும் நடித்த்திருந்தனர். மற்றும் கே.டி.சந்தானம், ரி.என்.சிவதாணு, வி.கோபாலகிருஷ்ணன், டைப்பிஸ்ட் கோபு, மாஸ்டர் தசரதன், ஏ.கே.வீராச்சாமி, பேபி ராணி, ஹெரான் ராமசாமி ஆகியோரும் நடித்திருந்தார்கள். பீட்டர் என்ற நாய் ஒன்றும் நடித்துள்ளது. குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்திருந்தார். படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டானது. படமும் வெற்றி பெற்றது.