15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் |
ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் படப்பிடிப்பு நடத்தி அதை சுற்றி கதை களம் அமைத்து அவ்வப்போது படங்கள் வந்திருக்கிறது. அவற்றில் முக்கியமான படம் 'கண்காட்சி'. 1971ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் அப்போது தென்சென்னை மற்றும் வடசென்னையில் நடந்த இரண்டு கண்காட்சிகளில் மட்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு 'கண்காட்சி' என்ற பெயரிலேயே வெளியானது.
இந்த படத்தை ஏ.பி.நாகராஜன் இயக்கி இருந்தார். சிவகுமார், குமாரி பத்மினி, மனோரமா, சிஐடி சகுந்தலா, கள்ளபார்ட் நடராஜன், சுருளிராஜன் நடித்திருந்தார்கள். சிவகுமார்-குமாரி பத்மினி ஒரு ஜோடியாகவும், கள்ளபார்ட் நடராஜன்--ஏ.சகுந்தலா ஒரு ஜோடியாகவும், சுருளிராஜன்-மனோரமா மற்றொரு ஜோடியாகவும் நடித்த்திருந்தனர். மற்றும் கே.டி.சந்தானம், ரி.என்.சிவதாணு, வி.கோபாலகிருஷ்ணன், டைப்பிஸ்ட் கோபு, மாஸ்டர் தசரதன், ஏ.கே.வீராச்சாமி, பேபி ராணி, ஹெரான் ராமசாமி ஆகியோரும் நடித்திருந்தார்கள். பீட்டர் என்ற நாய் ஒன்றும் நடித்துள்ளது. குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்திருந்தார். படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டானது. படமும் வெற்றி பெற்றது.