'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
தமிழில் பொங்கியெழு மனோகரா, சைத்தான் போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அருந்ததி நாயர். கடந்த மாதம் இவர் தன்னுடைய சகோதரருடன் பைக்கில் சென்றபோது வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டது. அதில் தூக்கி வீசப்பட்ட அருந்ததி நாயர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது கோமாவில் இருக்கும் அவருக்கு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று வாரங்களாக சிகிச்சை அளித்து வருகிறார்கள். தினமும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் நாள் ஒன்றுக்கு குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய் வரை அவரது குடும்பத்தார் செலவு செய்து வருவதோடு, இதுவரை 40 லட்சம் ரூபாய் செலவாகி விட்டதாக தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது கவலைக்கிடமான நிலையில் இருந்து வரும் அருந்ததியின் சிகிச்சைக்கு திரைஉலகினர் உதவ முன்வருமாறும் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.