காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
வாட்ஸ் ஆப் குரூப் என்பது இப்போதைய டிரண்டிங். குடும்பத்தினர், நண்பர்கள், ஒரே இடத்தில் பணியாற்றுகிறவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது நான்கைந்து வாட்ஸ் அப் குரூபிலாவது இருக்கிறார்கள். இதனால் பல நன்மைகள் இருந்தாலும் சில விபரீதங்களும் இருக்கிறது. அதை பற்றி பேசி இருக்கிற படம் 'ஒரே பேச்சு ஒரே முடிவு'.
இந்த படத்தில் புருஸ்லீ ராஜேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஸ்ரிதா சுஜிதரன் நடிக்கிறார். இவர்களுடன் தலைவாசல் விஜய், சம்பத் ராம், மீசை ராஜேந்திரன், ஐ.எம்.விஜயன், கராத்தே ராஜா ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியுள்ளார் வி.ஆர்.எழுதச்சன். ஆதர்ஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.அனில், இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் எழுதச்சன் கூறும்போது “ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இணையும் நாயகன், அந்த குரூப்பில் தனது பள்ளிப் பருவ காதலி இருப்பதை அறிந்து, அவளை சந்திக்க அவள் கணவன் இல்லாத நேரத்தில் செல்கிறான். அப்போது அங்கு நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாக வைத்து, படம் உருவாகி உள்ளது. வாட்ஸ் அப் நல்ல விஷயம்தான். ஆனால் அதனை தவறாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. அதை பற்றி பேசுகிற படமாக உருவாகி உள்ளது” என்றார்.