அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஏஆர் முருகதாஸ். சில ஹீரோக்களுக்கு திருப்புமுனையான படங்களைக் கொடுத்தவர். கடந்த சில வருடங்களாக தமிழில் படங்களை இயக்காமல் இருந்தார். அவர் திருப்புமுனை தந்த ஹீரோக்களை அவரை ஒதுக்கினார்கள். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ஏஆர் முருகதாஸ்.
அதோடு சல்மான் கான் நடிக்க உள்ள ஹிந்திப் படத்தை இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானது. இன்று அந்தத் தகவலை உறுதி செய்துள்ளார் ஏஆர் முருகதாஸ்.
“சல்மான்கான், தயாரிப்பாளர் சஜித் நடியத்வாலா ஆகியோருடன் இணைவதில் மிகவும் உற்சாகம். அசாத்திய திறமைசாலிகளுடன் இணைவது ஒரு பாக்கியம். மறக்க முடியாத சினிமா அனுபவத்திற்குத் தயாராகுங்கள். எங்களது படம் 2025ம் ஆண்டு 'ஈத்'துக்கு வர உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமீர்கான் நடித்த 'கஜினி' ஹிந்திப் படம் மூலம் 100 கோடி கிளப்பை ஆரம்பித்து வைத்தவர் ஏஆர் முருகதாஸ். அதன் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'அகிரா' ஹிந்திப் படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் தோல்வியைத் தழுவியது. தற்போது ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாலிவுட் பக்கம் போகிறார்.