மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தொலைக்காட்சிகளில் தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கிய காலத்தில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் கவிதா சவுத்ரி. தூர்தர்ஷனில் 1989ம் ஆண்டுகளில் இருந்து 1991ம் ஆண்டு வரை ஒளிபரப்பான 'உதான்' என்ற தொடரில் போலீஸ் அதிகாரி கல்யாணி சிங் கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர். பல தொடர்களில் நடித்த அவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
வயது மூப்பின் காரணமாக கடந்த சில வருடங்களாக நடிப்பில் இருந்து ஒதுங்கி அமிர்தசரசில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அருகில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போதே அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி கவிதா சவுத்ரி இறந்தார். அவருக்கு வயது 67. கவிதா சவுத்ரியின் மரணத்துக்கு பிரபல நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.