தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனராக இருப்பவர் கொரட்டலா சிவா. கடந்த வருடம் சிரஞ்சீவி, ராம்சரணை வைத்து இவர் இயக்கிய ஆச்சார்யா திரைப்படம் தோல்வியடைந்த நிலையில் தற்போது ஜூனியர் என்டிஆரை வைத்து தேவரா என்கிற படத்தை இயக்கி வருகிறார். கடந்த 2015ல் மகேஷ்பாபுவை வைத்து இவர் இயக்கிய ஸ்ரீமந்துடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதே சமயம் அந்த நேரத்தில் அந்தப் படத்தின் கதை, தான் ஒரு வார இதழில் எழுதி வந்த தொடர்கதையை திருடி எடுக்கப்பட்டுள்ளது என அதன் கதாசிரியர் ஆர் டி வில்சன் என்கிற சரத் சந்திரா என்பவர் ஆந்திராவில் உள்ள நம்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.
அப்போது கொரட்டலா சிவாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. இதனை தொடர்ந்து கொரட்டலா சிவா உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றமும் நம்பள்ளி நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது. இதனால் தற்போது கொரட்டலா சிவா சட்டப்படியான நடவடிக்கையை சந்திக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளார். இந்த சமயத்தில் அவர் தரப்பிலிருந்து கதாசிரியர் சரத் சந்திராவுடன் சமரசம் செய்து கொண்டு சென்றால் நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
இந்த தீர்ப்பானது கொரட்டலா சிவாவின் திரையுலக பயணத்தில் சறுக்கலை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. முன்னதாக வெளியான இவரது ஆச்சார்யா படத்திற்கு கூட தனது கதையை திருடி தான் படமாக்கி உள்ளார் என ஒரு கதாசிரியர் குற்றம் சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.