இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். விரைவில் அரசியலில் களம் காண உள்ளார். அதன் வெளிப்பாடாக தொடர்ச்சியாக தனது மக்கள் இயக்கம் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். கடந்த ஓராண்டாகவே மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், தொகுதி வாரியாக நூலகம், மழை வெள்ள பாதிப்பில் உதவி, தொகுதி வாரியாக மக்கள் நிர்வாகிகளின் சந்திப்பு என அரசியலுக்கான பணிகளை தீவிரமாக்கி வருகிறார்.
இந்நிலையில் சென்னையை அடுத்த பனையூரில் மக்கள் இயக்கம் மாவட்ட நிர்வாகிகளை விஜய் இன்று(ஜன., 25) சந்தித்து பேசினார். இதில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். எதிர்வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு ஒரு மாதத்திற்குள் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவது தொடர்பாகவும் நிர்வாகிகள் உடன் பேசியதாக தெரிகிறது. அரசியல் கட்சியாக பதிவு செய்த பின் தேர்தலை சந்திக்கலாமா... கூட்டணி வைத்து போட்டியிடலாமா அல்லது தனித்தே போட்டியிடலாமா போன்ற விஷயங்களும் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.