'ஜனநாயகன், பராசக்தி' டிக்கெட் புக்கிங் நிலவரம் எப்படி | சின்ன படங்களுக்கு எட்டாக்கனியாகிறதா அனிருத் இசை? | இளவரசியாக நடிக்கும் ரக் ஷனா | பொங்கல் போட்டி : தியேட்டர்கள் கிடைக்கத் தடுமாறும் தெலுங்குப் படங்கள் | 'ஜனநாயகன்' டிரைலரை பின்னுக்குத் தள்ளிய 'பராசக்தி' டிரைலர், எழுந்த சர்ச்சை | 'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். விரைவில் அரசியலில் களம் காண உள்ளார். அதன் வெளிப்பாடாக தொடர்ச்சியாக தனது மக்கள் இயக்கம் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். கடந்த ஓராண்டாகவே மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், தொகுதி வாரியாக நூலகம், மழை வெள்ள பாதிப்பில் உதவி, தொகுதி வாரியாக மக்கள் நிர்வாகிகளின் சந்திப்பு என அரசியலுக்கான பணிகளை தீவிரமாக்கி வருகிறார்.
இந்நிலையில் சென்னையை அடுத்த பனையூரில் மக்கள் இயக்கம் மாவட்ட நிர்வாகிகளை விஜய் இன்று(ஜன., 25) சந்தித்து பேசினார். இதில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். எதிர்வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு ஒரு மாதத்திற்குள் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவது தொடர்பாகவும் நிர்வாகிகள் உடன் பேசியதாக தெரிகிறது. அரசியல் கட்சியாக பதிவு செய்த பின் தேர்தலை சந்திக்கலாமா... கூட்டணி வைத்து போட்டியிடலாமா அல்லது தனித்தே போட்டியிடலாமா போன்ற விஷயங்களும் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.