வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தற்போது தனது அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவரது அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இது குறித்து நெல்சன் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் அவர் பேசும்போது, ‛‛ஜெயிலர் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான கதை எழுதும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறேன். இந்த படத்தில் நடிப்பதற்கு சில முக்கிய நடிகர்களிடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன். இன்னும் யார் என்பது முடிவாகவில்லை. என்றாலும் ஒரு மாதத்திற்குள் எனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்'' என்றார் நெல்சன். தனது அடுத்த படத்தின் ஹீரோ யார் என்பதை அவர் இதுவரை அறிவிக்கவில்லை என்றாலும் தனுஷின் 51வது படத்தை தான் அடுத்து அவர் இயக்கப் போகிறார் என்று கோலிவுட் வட்டாரங்களில் ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.