இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகை சிம்ரன் 90களின் மத்தியில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நுழைந்தார். நுழைந்த வேகத்திலேயே ஒரே சமயத்தில் நான்கு படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்தார். அதை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களிலும், கதையம்சம் கொண்ட படங்களிலும் தொடர்ந்து நடித்து பல வருடங்கள் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார். இதற்கு பின்னணியில் அவருக்கு உறுதுணையாக நின்று படங்களை தேர்வு செய்து கொடுப்பதில் அவரது மேலாளர் காமராஜன் என்பவர் பக்கபலமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று காமராஜன் உடல் நலக்குறைவால் காலமானார். இதுகுறித்து தனது வருத்தத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி காமராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகை சிம்ரன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நம்ப முடியாத அதிர்ச்சி தருகின்ற ஒரு செய்தி. என்னுடைய அன்பு நண்பர் எம்.காமராஜன் இப்போது இல்லை.. கடந்த 25 வருடங்களாக எனது வலது கையாக, எனக்கு ஆதரவுத் தூணாக எப்போதுமே சிரித்த முகத்துடன் ஒரு புத்திசாலித்தனமான நம்பகத்தன்மை கொண்ட மனிதராக வலம் வந்தவர். அவர் தன்னை தானாகவே உருவாக்கிக் கொண்ட ஒரு மனிதர். நீங்கள் இல்லாமல் சினிமாவில் எனக்கு எதுவுமே சாத்தியம் ஆகி இருக்காது. உங்களது வாழ்க்கை பல பேருக்கு பெரிய அளவில் மாற்றத்தை கொடுத்திருக்கிறது. உங்களுடைய குடும்பத்திற்கும் உங்களை நேசிப்பவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.. ஓம் சாந்தி..” என்று கூறியுள்ளார் சிம்ரன்.