பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
இறுதிச்சுற்று படத்தில் நாயகியாக அறிமுகமானவர் குத்துச் சண்டை வீரங்கானையான ரித்திகா சிங். தொடர்ந்து ‛ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, கொலை' போன்ற படங்களில் நடித்தார். தற்போது ஞானவேல் இயக்கும் ரஜினியின் 170வது படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படப்பிடிப்பில் இவருக்கு கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த போட்டோவை பகிர்ந்து, ‛‛இதை பார்க்கையில் நான் ஒரு ஓநாய் உடன் சண்டை போட்டது போல் தெரிகிறது'' என குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு வீடியோவில், ‛‛அங்கு கண்ணாடி இருக்கிறது கவனமாக இருங்கள் என்றார்கள். நான் பொருட்படுத்தவில்லை. சில நேரம் நம்மால் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் கட்டுப்பாட்டை இழந்ததால் இப்படி நிகழ்ந்தது. வலிக்கவில்லை என்றாலும் காயம் ஆழமாக இருக்கிறது. மருத்துவமனை செல்கிறேன், விரைவில் சரியாகும் என நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
எந்த படப்பிடிப்பில் இது நிகழ்ந்தது என ரித்திகா சிங் குறிப்பிடவில்லை. ஆனால் இது ரஜினி படத்தில் நிகழ்ந்த காயம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.