துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். வரப்போகிற 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பு அவர் அரசியல் களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளார். அதற்கேற்ப விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரத்ததான மையம், விஜய் விழியகம், விஜய் இரவு பாடசாலை, விஜய் மினி கிளினிக் உட்பட பல மக்களுக்கான சேவை மையங்களை துவக்கி வரும் விஜய், அடுத்து தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் நூலகம் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளார். இந்த நூலகங்களில் அரசியல் தலைவர்கள், தேசிய தலைவர்கள், தமிழர்கள் வரலாறு குறித்த புத்தகங்கள் இடம் பெறுகிறதாம். தற்போது அதற்கு தேவையான புத்தகங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது தான் நடித்து வரும் 68 வது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், சில மாதங்கள் நடிப்புக்கு இடைவெளி கொடுத்துவிட்டு அரசியல் கட்சி தொடங்கும் பணிகளில் விஜய் ஈடுபடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.