மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழகத்தில் புதிய கலச்சாரமாக பல்வேறு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடனம், பாடல் என கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஞ்சித் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி குறித்து கடுமையாக சாடியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், 'சமீபத்தில் ஒரு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பெண் குழந்தைகளை அரைகுறை ஆடையுடன் தெருவில் ஆடவிடுவது எல்லாம் மனவேதனையாக இருக்கிறது. என்னிடம் அதிகாரம் இருந்தால் அனைவருக்கும் ஆயுள் தண்டனை கொடுத்து விடுவேன். யார் மகனுடனோ யாரோ ஆடலாம்? யார் பெண்ணுடன் யாரோ ஆடலாம்?. இந்நிகழ்ச்சியால் தமிழ்நாடு எதிர்காலத்தில் ஒரு தாய்லாந்து போல மாறிவிடும்' என்று விமர்சித்துள்ளார். ரஞ்சித் பேசிய இந்த கருத்தானது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.