நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் | கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? | மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் |
ரஜினியின் ஜெயிலர் படத்தை அடுத்து தனுஷ் அல்லது அல்லு அர்ஜுன் நடிக்கும் படங்களை நெல்சன் இயக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது கோலமாவு கோகிலா படத்தை அடுத்து மீண்டும் நயன்தாராவை கதையின் நாயகியாக வைத்து ஒரு பான் இந்தியா படத்தை நெல்சன் இயக்கயிருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
தற்போது நயன்தாரா அன்னபூரணி, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, கமல் 234வது படம் என பல படங்களில் நடித்து வரும் நிலையில், கோலமாவு கோகிலாவுக்கு பிறகு தான் கதையின் நாயகியாக நடித்த படங்கள் ஹிட்டாக அமையாததால், மீண்டும் நெல்சனுடன் இணைந்து ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்று நயன்தாராவும் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தற்போது அவர் கதையின் நாயகியாக நடித்து வரும் இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், நயன்தாராவை வைத்து தான் இயக்கும் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் நெல்சன்.