'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படத்தில் இடம்பெற்ற 'ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..' என்ற புகழ்பெற்ற பாடலையே படத்தின் தலைப்பாக்கி ஒரு படம் தயாராகி உள்ளது. இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ.ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேஷவ் தெபுர் இயக்கியிருப்பவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, பெங்காலி என்று இந்திய மொழிகளில் சுமார் 350 திரைப்படங்களில் நடன இயக்குநராகப் பணி புரிந்திருக்கிறார்.
கார்த்திக், காயத்ரி பட்டேல், பாலா, மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவிவர்மா, அபிஷேக், பெஞ்சமின், சிம்ரன், தீபிகா, காயத்ரி, ஜெபி, ஜெயவாணி, அக்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர். படம் பற்றி தயாரிப்பாளர் ஏ.ஜெயலட்சுமி கூறியதாவது: இப்படத்தின் கதை ஒரே இரவில் நடக்கிறது. பெல்லாரி ராஜாவும், தாமோதரனும் அரசியலில் ஒன்றாக இருந்து பகைவர்களாக மாறியவர்கள்.
பெல்லாரி ராஜா ஒரு கொலை செய்யும்போது அதை ஒரு பெண் பார்த்து விடுகிறார். அவளை தீர்த்துக்கட்ட பெல்லாரி ராஜா தன் ஆட்களுடன் அவரை துரத்த அந்த பெண் ஒரு லேடீஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்து விடுகிறார். பெல்லாரி ராஜா ஆட்களும் நுழைந்து விடுகிறார்கள். கொலைக்கு பழிவாங்க வரும் தாமோதரனும் தனது ஆட்களுடன் லேடீஸ் ஹாஸ்டலுக்குள் நுழைகிறார். அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
இந்த படத்தை தணிக்கைக்கு அனுப்பியோது தணிக்கை அதிகாரிகள் 60 இடத்தில் கட் கொடுத்தார்கள். அதை செய்தால் ஏ சான்றிதழ் தருவதாக சொன்னார்கள். ஆனால் 60 கட் என்றால் கதை பாதிக்கும் என்பதால் மும்பைக்கு சென்று மறுதணிக்கை செய்து குறைவான கட்டுகளுடன் ஏ சான்றிதழ் வாங்கி உள்ளோம். வருகிற நவம்பர் 3ம் தேதி படம் வெளியாகிறது. என்றார்.