இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
கடந்த 2005ல் வெளியாகி ஹிட்டான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக சந்திரமுகி 2 படம் உருவாகியுள்ளது. பி வாசு இயக்க, ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, கங்கனா ரணவத், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி காங்கே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது புகழ் மரகதமணி எனும் கீரவாணி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 28ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை ஐதராபாத்தில் நடத்திய சந்திரமுகி 2 படக்குழுவினர், அதைத் தொடர்ந்து ஐதராபாத் ஜூபிளி ஹில்ஸில் இருக்கும் பெத்தம்மா தல்லி கோயிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர்.
சமீபகாலமாக தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் தங்களது படம் வெற்றிகரமாக ஓடவேண்டும் என்பதற்காக இந்த கோயிலுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கூட தான் நடித்த சாகுந்தலம் பட ரிலீஸிற்கு முன்னதாக நடிகை சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் இங்கு சென்று வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.