மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்சனை வெடிக்கும் போதெல்லாம் கர்நாடகாவில் தமிழர்களும், தமிழர்கள் நடத்தும் வியாபார நிறுவனங்கள், தமிழ்ப் படங்களை வெளியிடும் தியேட்டர்கள் பாதிக்கப்படுவது வழக்கம். இன்று கர்நாடகவில் பந்த் நடந்து வருகிறது. காவிரி விவகாரம் வரும்பேதெல்லாம் தியேட்டர்களில் தமிழ்ப் படங்களைத் திரையிடுவதை நிறுத்திவிடுவார்கள்.
தமிழகத்திற்கு அதிக மழைநீரைத் தரும் வடகிழக்குப் பருவமழை துவங்கும் வரை இந்த காவிரி விவகாரம் சூடான நிலையிலேயே இருக்கும். நவம்பர் மாதம்தான் அப்பருவமழையின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்நிலையில் அக்டோபர் 19ம் தேதி விஜய் நடித்துள்ள 'லியோ' படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கன்னடத்திலும் இப்படத்தை டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். நேரடியாகவும் கர்நாடகா முழுவதும் படம் வெளியாக உள்ளது. அம்மாநில உரிமையாக சுமார் 15 கோடிக்கு வியாபரம் நடந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
ரஜினிகாந்த் நடித்து வெளியான 'ஜெயிலர்' படம் கர்நாடகவில் மட்டும் சுமார் 75 கோடி வசூலித்துள்ளது. அதைவிட அதிகத் தொகையை 'லியோ' படம் வசூலிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. காவிரி போராட்டம் கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளதால் செப்டம்பர் 28 வெளியாக உள்ள தமிழ்ப் படங்கள் மற்றும் வரும் வாரங்களில் வெளியாக உள்ள படங்கள் பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளது.