சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

தமிழ் சினிமாவில் இளம் முன்னணி நடிகைகள் பட்டியலில் பிரியா பவானி சங்கர் தனக்கென ஒரு இடம் பிடித்து விட்டார். சீரான இடைவெளிகளில் அவரது படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அடுத்ததாக கைவசம் ஆறு படங்களை தன்னிடம் வைத்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். இந்த நிலையில் சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பிரியா பவானி சங்கர்.
இந்த நிகழ்ச்சியில் அவர் வெறுமனே இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு நடிகையாக மட்டும் கலந்து கொள்ளாமல் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளான ஒரு தாயின் மகளாகவும் தனது உணர்வுகளையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வதற்காகவே வந்திருந்தார் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிந்தது.
இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, கடந்த வருடம் தனது தாய்க்கு கேன்சருக்கான அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஆரம்ப நிலையில் இருப்பதால் முற்றிலும் குணப்படுத்தி விட முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள். தொடர்ந்து தனது தாய்க்கு அவர் எந்த அளவு மன உறுதி தரும் விதமாக நடந்து கொள்ள வேண்டிய இருந்தது என்பதையும் மருத்துவர்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தையும் முறையாக கடைபிடித்ததையும் கூறியவர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் முழுதாக மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் நம்ப வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். தனது தாய் புற்றுநோய் தாக்கம் காரணமாக அவதிப்பட்டார் என்பதை கூறும் போது தன்னை அறியாமல் மேடையிலேயே கண்கலங்கினார் பிரியா பவானி சங்கர்.




