போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தமிழ் சினிமாவில் முக்கியமான சங்கங்களில் ஒன்றாக இருப்பது தயாரிப்பாளர் சங்கம். இந்த சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா ஆகியோருக்கு புதிய படங்களில் நடிப்பதற்கு தடை விதிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
“அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படம் தொடர்பாக அதன் தயாரிப்பாளருக்கும், அப்படத்தில் கதாநாயகனாக நடித்த சிம்புவுக்கும் அப்போதிருந்தே பிரச்சனை இருந்து வருகிறது. பல முறை பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் சிம்பு வரவில்லை. அதனால், அவருக்குத் தடை என முடிவு செய்துள்ளார்கள்.
தயாரிப்பாளர் சங்கத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் முரளி ராமசாமி தயாரிப்பில் தனுஷ் இயக்கம் நடிப்பில் படம் ஒன்று ஆரம்பமானது. ஆனால், அப்படத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டனர். மேற்கொண்டு அந்தப் படத்திற்காக தனுஷ் வரவில்லையாம். அதுதான் அவருக்குத் தடையாக வந்துள்ளது.
தற்போது நடிகர் சங்கத்தின் செயலாளராக இருக்கும் விஷால், இதற்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். அப்போது சங்கத்தின் பணத்தை முறையாக கையாளவில்லையாம். அதை வைத்து அவருக்குத் தடை கொடுத்துள்ளார்களாம்.
நடிகர் அதர்வா மீது தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாருக்கு அதர்வா தரப்பில் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லையாம். அதன் காரணமாக அதர்வாவுக்குத் தடை விதித்திருக்கிறார்களாம்.
இதற்கு முன்பு இது போல் நடிகர்களுக்குத் தடை எனச் சொல்வார்கள். ஆனால், வெளிப்படையாக அறிவிக்க மாட்டார்கள். அதே சமயம் மறைமுகமாக அந்தத் தடையை செயல்படுத்துவார்கள். தற்போது சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா மீது விதிக்கப்பட்டுள்ள தடைக்கு நடிகர் சங்கம் என்ன செய்யப் போகிறது என்பது இனிமேல்தான் தெரியும்.