‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
பி.எஸ்.எஸ் புரோடக்ஷன்ஸ் மற்றும் உத்ரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'எண்.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு'. சரத் அறிமுக கதாநாயகனாகவும், அயிரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் கஞ்சா கருப்பு, அருவி மதன், சோனா ஹைடன், நரேன் , இளையா, எஸ் .எம்.டி கருணாநிதி நடித்துள்ளனர். வினோத் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார், அலிமிர்சா இசை அமைத்துள்ளார். செ.ஹரி உத்ரா இயக்கி உள்ளார். வருகிற 15ம் தேதி வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் ஹரி உத்ரா கூறும்போது, “கிராமங்களில் இருந்து இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் கால்பந்து விளையாட்டில் முத்திரை பதிக்க துடிக்கும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் எவ்வாறு கால்பந்து விளையாட்டில் தங்களுக்கான இடங்களை திறமையின் மூலம் பிடிக்க முயல்கின்றனர் என்பதை பின்னணியாக வைத்து அதற்கு பின்னால் உள்ள அரசியலை இத்திரைப்படம் பேசுகிறது. அதிகாரவர்க்கம் ஒடுக்கப்பட்டவர்களை எவ்வாறு அவர்களுடைய திறமைகளை ஒடுக்கி அவர்களை தங்களுடைய மேல் நிலையை அடைய முடியாமல் தவிக்கும் போக்கை மேற்கொள்கின்றனர் என்பதை படத்தின் மையக்கருவாக வைத்திருக்கிறேன். பரமக்குடி, மதுரை ,ராம்நாடு பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட நிஜ கால்பந்து விளையாட்டு வீரர்களை கொண்டு படமாக்ப்பட்டுள்ளது” என்றார்.