லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

ஒரு காலத்தில் இசையும், தமிழும் செழித்து வளர்ந்த இடம் யாழ்ப்பாணம். பல ஆண்டுகளாக அங்கு நடந்த உள்நாட்டு போரால் எப்போதும் துப்பாக்கி சத்தமும், குண்டு மழையும், ரத்த ஆறும் ஓடியது. போர் முடிவுக்கு வந்து தற்போது அமைதி திரும்பி இருக்கும் நேரத்தில் அங்கு சென்று முதன் முறையாக இசை நிகழ்ச்சி நடத்துகிறார், தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
'சவுண்ட்ஸ் ஆப் தி சவுத்' என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை காண எந்த வித கட்டணமும் இல்லை. அதோடு முற்றவெளி மைதானம் என்ற இடத்தில் திறந்தவெளியில் நடக்கிறது இந்த இசை நிகழ்ச்சி. வருகிற 30ம் தேதி மாலை 4 மணி முதல் நடக்கிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் “யுத்தத்தின் மூலமும், சமீபகாலமாக பொருளாதாரக் கொந்தளிப்பின் ஊடாகவும் பயணப்படும் அங்குள்ள தமிழ் சமூகத்திற்கு தைரியத்தையும், உறுதியையும் வழங்க வேண்டும் என்ற சந்தோஷின் நீண்டகால ஆசை இப்போது இந்த இசை நிகழ்ச்சி மூலம் நிறைவேற உள்ளது.
யாழ்ப்பாண மக்களுக்கு 'சவுண்ட்ஸ் ஆப் தி சவுத்' இலவச இசை நிகழ்வாக இருக்கும். பிற வழக்கமான இசை நிகழ்ச்சிகளைப் போல அல்லாமல், 'சவுண்ட்ஸ் ஆப் தி சவுத்' பல்வேறு தெற்காசிய கலாச்சாரங்களிலிருந்து எடுக்கப்பட்ட இசைக் கலவை, பிரபலமான பின்னணி பாடகர்கள் முதல் அற்புதமான சுயாதீன கலைஞர்கள் வரை பல்வேறு வகைகளையும், இசைக்கலைஞர்களையும் இந்த நிகழ்சியில் அறிமுகப்படுத்த உள்ளது. சந்தோஷ் நாராயணனனே இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் இருப்பதால் இந்த இசை மொழி, கலாச்சாரம் போன்ற எந்தவிதமான தடையும் இல்லாமல் அனைத்து வகையான பார்வையாளர்களிடமும் சென்றடையும் என்பது நிச்சயம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.