ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛கருமேகங்கள் கலைகின்றன'. பாரதிராஜா, கவுதம் மேனன், அதிதி பாலன், யோகி பாபு முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் பேசிய தங்கர் பச்சான், ‛‛சமூகம் கேட்கும் கதையை உருவாக்க வேண்டி உள்ளது. ஆனால் அதற்கு தயாரிப்பாளை தேடி அலைய வேண்டி உள்ளது. அப்படியே கிடைத்தால் படத்தை வெளியிடுவது அதைவிட சிரமம். மக்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க வேண்டும். பெரிய நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு நல்ல படத்துக்கு கிடைப்பதில்லை. கண் முன் 100 பேரை கொல்வதை பார்க்கும் குழந்தைகள் என்னவாக வளரும். ரூ.100 கோடி, ரூ.200 கோடி என பணம் வந்தால் போதுமா. அறிவு வேண்டாமா. கலைஞனுக்கு பொறுப்பும், கடமையும் உண்டு. 10 மசாலா படங்களை காட்டினால் குழந்தைகள் அழிந்தே போய்விடுவார்கள். நான் ஒரு நல்ல படத்தை எடுத்து இருக்கிறேன் வந்து பாருங்கள் என கெஞ்சிக் கொண்டே இருக்க வேண்டுமா?'' என ஆதங்கமாக பேசினார்.