ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் |

தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛கருமேகங்கள் கலைகின்றன'. பாரதிராஜா, கவுதம் மேனன், அதிதி பாலன், யோகி பாபு முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் பேசிய தங்கர் பச்சான், ‛‛சமூகம் கேட்கும் கதையை உருவாக்க வேண்டி உள்ளது. ஆனால் அதற்கு தயாரிப்பாளை தேடி அலைய வேண்டி உள்ளது. அப்படியே கிடைத்தால் படத்தை வெளியிடுவது அதைவிட சிரமம். மக்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க வேண்டும். பெரிய நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு நல்ல படத்துக்கு கிடைப்பதில்லை. கண் முன் 100 பேரை கொல்வதை பார்க்கும் குழந்தைகள் என்னவாக வளரும். ரூ.100 கோடி, ரூ.200 கோடி என பணம் வந்தால் போதுமா. அறிவு வேண்டாமா. கலைஞனுக்கு பொறுப்பும், கடமையும் உண்டு. 10 மசாலா படங்களை காட்டினால் குழந்தைகள் அழிந்தே போய்விடுவார்கள். நான் ஒரு நல்ல படத்தை எடுத்து இருக்கிறேன் வந்து பாருங்கள் என கெஞ்சிக் கொண்டே இருக்க வேண்டுமா?'' என ஆதங்கமாக பேசினார்.




